மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் - வீடு திரும்பினார் கருணாநிதி

கடுமையான முதுகுவலி காரணமாக கருணாநிதி ஜனவரி 26-ம்ந் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பிப்ரவரி 11-ம் தேதி முதுகு தண்டு வடத்தில் அறுவைச் சிகிச்சை நடந்தது. மொத்தம் 34 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார் முதல்வர்.
இந்த நிலையில் அவரது உடல் நலம் தேறியது. இதைத் தொடர்ந்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதன்படி இன்று காலை 9 மணிக்கு முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆம்புலன்ஸ் வேனில் புறப்பட்டு வீடு திரும்பினார். முதல்வருடன் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகன் மு.க.அழகிரி, அமிர்தம், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், மத்திய அமைச்சர் ராசா மற்றும் டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில் டாக்டர்களும் உடன் வந்தனர்.
கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவதைத் தொடர்ந்து மருத்துவமனை முன்பு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு இருந்தனர். வழியெங்கும் ஆங்காங்கே தி.மு.க.வினர் கருணாநிதிக்கு வரவேற்பு கொடுத்தனர்.
வரும் வழியில், புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ள அன்பகத்தை வேனில் இருந்தபடியே முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் அவர் வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications