தீவிரவாதம்-பீதியால் பாதிக்கப்பட்ட தொடர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக அளவில் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் பீதியால் பாதிக்கப்பட்டுள்ளன, பல ரத்தாகியுள்ளன. அதுகுறித்த ஒரு பார்வை...

1996 - இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தின. இந்த நிலையில் கொழும்பில் உள்ள சென்டிரல் வங்கியை விடுதலைப் புலிகள் தாக்கியதைத் தொடர்ந்து, இலங்கையில் விளையாட ஆஸ்திரேலியாவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மறுத்து விட்டன.

2002 - நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கராச்சியில் டெஸ்ட் போட்டி நடக்கவிருந்த நிலையில் அங்கு குண்டு வெடித்தது. இதையடுத்து டெஸ்ட் தொடரை நியூசிலாந்து ரத்து செய்தது.

2003 - கென்யாவில் உலக கோப்பைப் போட்டிகள் நடந்தபோது அங்கு வந்து விளையாட இங்கிலாந்து அணி மறுத்து விட்டது.

2006 - இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டது.

2008 - மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. பின்னர் மீண்டும் வந்து விளையாடியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+