முன்பு ஸ்ரீகாந்த்தை தாக்கிய பாக். ரசிகர்கள்
Subscribe to Oneindia Tamil

ஆனால், இப்போது தான் முதன்முறையாக தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளது.
1989ல் இந்திய கிரிக்கெட் அணி ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த அணியில்தான் முதன் முதலாக சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றிருந்தார்.
கராச்சி டெஸ்ட் போட்டியின்போது, இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ரசிகர்கள் வெறித் தாக்குதலை மேற்கொண்டனர். பீல்டிங்கில் இருந்த ஸ்ரீகாந்த் மீது முட்டைகளை வீசித் தாக்கினர். சிலர் உள்ளே புகுந்து ஸ்ரீகாந்த்தை சரமாரியாக அடித்து அவரது டி-சர்ட்டை கிழித்தனர்.
போலீஸார் விரைந்து வந்து ரகளை செய்த வீரர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த விரும்பாமல் இந்தியா தொடர்ந்து விளையாடியது.












Click it and Unblock the Notifications