பிரமோஸ் ஏவுகணை-வெற்றிகரமாக சோதனை
டெல்லி: கடந்த சோதனையில் தோல்வியை தழுவிய பிரமோஸ் ஏவுகணை இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில் இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றி கண்டது.
இந்திய, ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான இந்த ஏவுகணை பலமுறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜனவரி 20ம் தேதி நடந்த சோதனையில் இந்த ஏவுகணை இலக்கைத் தவறவிட்டது.
ஆனால், அதை மூடி மறைத்து சோதனை வெற்றி அடைந்ததாக அறிவித்தது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவு (டிஆர்டிஓ). பின்னர் இந்த ஏவுகணை சோதனை தோல்வியைத் தழுவிய உண்மை வெளியில் வந்தவுடன் அதை வேறு வழியின்றி ஒப்புக் கொண்டது டிஆர்டிஓ.
இந் நிலையில் 290 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் இந்த ஏவுகணை இன்று காலை 10.30 மணிக்கு ராஜஸ்தான் மாநில பொக்ரானில் மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றது.
இது குறித்து டிஆர்டிஓ அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இன்று காலை பொக்ரானில் நடந்த சோதனையில் பிரமோஸ் இரண்டரை நிமிடத்தில் இலக்கை துல்லியமாக தாக்கியது. சோதனையை இந்திய ராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் எம் எஸ் தத்வால் பார்வையிட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications