திருச்சி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில், தண்டவாளம் அருகே இருந்த சிக்னல் கேபிள் வயர்கள் முழுவதுமாக எரிந்தன.
இந்த தீவிபத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், 10 நிமிடம் தாமதமாக சென்றது.
அதேபோல, நெல்லை - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் 30 நிமிடம் தாமதமாகவும், மயிலாடுதுறை - நெல்லை பாசஞ்சர் ரெயில் 10 நிமிடம் தாமதமாகவும் புறப்பட்டு சென்றன.
தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications