'ஆஹா...!:' நாங்களும் போட்டியிடுவோம்..கார்த்திக்
கோவில்பட்டி: பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக், இன்னும் ஓரிரு வாரங்களில் கூட்டணி குறித்து முடிவெடுக்கவுள்ளாராம்.
தேர்தல் வந்துவிட்டால் கார்த்திக்கின் தொல்லை தாங்க முடியாது. கூட்டணி என்பார், போட்டி என்பார், மாநாடு என்பார்.. ஆனால் ஒன்றையும் முழுதாக செய்ய மாட்டார்.
இந் நிலையில் அவர் தொடங்கியுள்ள அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் பொதுகூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி தலைமையில் நடைபெற்றது.
நாங்களும் போட்டியிடுவோம்..
கூட்டத்தில் கார்த்திக் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பது பற்றி விரைவில் முடிவு செய்து ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும்.
பொருளாதார வீழ்ச்சியால் விலைவாசி உயர்ந்துள்ளது. தேவைக்கேற்ப உற்பத்தியை பெருக்க வேண்டும். தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.
அணுசக்தி ஓப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள். மின்சாரம் உள்ளிட்ட தேவைகளை அணுசக்தி மூலம் 2 ஆண்டுகளில் பூர்த்தி செய்து கொள்ளலாம். இட ஓதுக்கீடு மிக முக்கியமானது. ஆனால் அதனுடைய பலன் ஏழைகளை சென்றடைய வேண்டும் என்றார் கார்த்திக்.