தேர்தல் வந்தாச்சே.. சிறப்பு ரயில்களை இயக்கலாமா?
டெல்லி: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் சிறப்பு ரயில்களை இயக்கலாமா என்று கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு, ரயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் நாடு முழுவதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அரசு தரப்பில் எதைச் செய்தாலும் பார்த்துச் செய்ய வேண்டிய நிலை.
இந் நிலையில், டெல்லியிலிருந்து 20 சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். இந்த ஆண்டும் அதுபோல இயக்க வேண்டும். ஆனால் இது தேர்தல் நடத்தை விதியை மீறிய செயலாகுமா என்று கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு ரயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து இதுபற்றி வடக்கு ரயில்வே,எழுதியுள்ள கடிதத்தில், பள்ளி விடுமுறை நாட்களை கணக்கிட்டு, கோடை காலத்தில் டெல்லியில் இருந்து 20 விசேஷ ரயில்களை, ஆண்டு தோறும் இயக்குகிறோம்.
இது போன்ற ரயில்களை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்கலாமா? என்று கேட்கப்பட்டுள்ளது.
அத்தோடு நில்லாமல், இந்த ரயில்களின் விவரத்தையும் இணைத்து அனுப்பியுள்ளனராம்.












Click it and Unblock the Notifications