Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆற்றில் பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி - 40 பேர் படு காயம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 60 பேருடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 40 பேர் படுகாயமடைந்தனர்.

விழுப்புரத்திலிருந்து அவியனூர் வழியாக பண்ருட்டிக்கு தனியார் பஸ் ஒன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சை ரெட்டிக் குப்பத்தை சேர்ந்த பரசுராமன் என்பவர் ஓட்டியுள்ளார்.

சேமங்கலம் மலட்டாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பஸ் திடீரென்று நிலைத் தடுமாறி அங்கிருந்த பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்தது. இதையடுத்து பயணிகளின் பீதியில் கூக்குரலிட்டுள்ளனர். அவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பஸ்சுக்குள் சிக்கி கொண்டவர்களை காப்பாற்றினர்.

புதுப்பேட்டையை சேர்ந்த லட்சுமி (38), தமிழ் (40), பண்டரக்கோட்டையை சேர்ந்த வள்ளி (40), மீனாட்சி (55), தமிழரசி(35), செல்வி (45), திருவாமூரை சேர்ந்த பஸ் டிக்கெட் பரிசோதகர் தேவநாதன் ஆகியோர் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் படுகாயமடைந்த ராஜ்மோகன் (45), கனி, துரைக்கண்ணு, அஞ்சலை உள்ளிட்ட 10 பேர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும வழியில் ரெட்டி குப்பத்தை சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+