சத்யம்: 51% பங்குகளை விற்க செபி அனுமதி!
டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்கும் முடிவுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது.
இப்போது இந்த பங்குகளை வாங்க சர்வதேச அளவில் முதலீட்டாளர்களை எதிர்பார்ப்பதாக சத்யம் கூறியுள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸால் தேர்ந்தெடுக்கப்படும் முதலீட்டாளர்களுக்கு சத்யத்தின் 31 சதவீத பங்குகள் கொடுக்கப்படும். அவர்கள் மேலும் 21 சதவீத பங்குகளை வெளிச் சந்தையில் வாங்கிக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே 31 சதவீத பங்குகளை என்ன விலைக்கு வாங்கினார்களோ அதே விலைக்கே இந்த 21 சதவீத பங்குகளும் கொடுக்கப்படும்.
ஒரு வேளை அவர்களால் வெளிச் சந்தையில் 21 சதவீத பங்குகளை வாங்க முடியவில்லை என்றால், அவர்களுக்கு தேவையான பங்குகளை (மொத்தம் 51 சதவீத பங்குகள் இருப்பதற்கு தேவையான) சத்யம் கம்ப்யூட்டர்ஸே கொடுக்கும்.
சத்யத்தின் 51 சதவீத பங்குகளை வாங்குபவர்கள் அந்த பங்குகளை வாங்கிய தேதியிலிருந்து மூன்று வருடங்களுக்கு வேறு யாருக்கும் அவற்றை விற்க முடியாது. நேற்றைய சந்தை நிலவரப்படி சத்யத்தின் பங்குகள் ரூ.35.10 விலையில் இருந்தன.
கடும் நிதி நெருக்கடி மற்றும் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தி என பல மைனஸ்கள் இருந்தாலும் சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்க எஸ்ஸார், எல் அண்டு டி, ஸ்பைஸ் மற்றும் ஐபிஎம் போன்ற இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications