பிளஸ்டூ தேர்வில் பிட் அடித்து சிக்கிய 45 மாணவர்கள்
சென்னை: பிளஸ்டூ தேர்வில், ஆங்கிலம் முதல் தாள் தேர்வின்போது காப்பி அடித்ததாக 45 மாணவர்கள் தமிழகம் முழுவதும் சிக்கியுள்ளனர்.
பிளஸ்டூ பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கியது. தமிழ் முதல் தாள் மறறும் இரண்டாம் தாள் தேர்வுகளின்போது காப்பி அடித்து சில மாணவர்கள் சிக்கினர்.
இந்த நிலையில், நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடை பெற்றது.
ஆங்கிலம் முதல் தாள் பரீட்சையின்போதும் காப்பி அடித்து மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். நேற்று காப்பி அடித்ததாக தமிழ்நாடு முழுவதும் 45 பேர் பிடிபட்டனர். விழுப்புரத்தில் 12 பேரும், கடலூரில் 11 பேரும், மதுரையில் 10 பேரும், சென்னையில் ஒரு மாணவரும் சிக்கினர்.
ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வுகளில் காப்பி அடித்த 55 பேர் பிடிபட்டனர். கடந்த ஆண்டில் காப்பி அடித்த 250 மாணவர்கள் கையும் களவுமாக சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இந்த முறை இது அதிகமாக இருக்கும் போலத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications