வக்கீல்களின் கலகமே மோதலுக்கு காரணம்-ஸ்ரீகிருஷ்ணா

பிப்ரவரி 19ம் தேதியன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் வன்முறை மூண்டது. வக்கீல்களும், போலீஸாரும் சரமாரியாக மோதிக் கொண்டனர். பல நூறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல் நிலையம் தீவைத்து எரிக்கப்பட்டது.
நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை உச்சநீதிமன்றம் நியமித்தது.
இதையடுத்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, சென்னை வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தினார். அவரிடம் வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள், மூத்த வக்கீல்கள் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அதேபோல காவல்துறை அதிகாரிகள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தையும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் டெல்லி திரும்பினார்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை அவருடைய இல்லத்தில் சந்தித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
வக்கீல்களே பிரச்சினைக்குக் காரணம்...
இந்த அறிக்கையில் வக்கீல்களே பிரச்சினைக்குக் காரணம் என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
நீதிபதியின் அறிக்கை விவரத்தை இன்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நீதிபதியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ..
போலீசாருடன் மோதல் ஏற்பட்ட போது வக்கீல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடந்து கொண்டனர். வக்கீல்களின் நடவடிக்கை குற்றம் செய்பவர்களின் நடவடிக்கை போல மோசமாக இருந்தது.
வக்கீல்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் போல தங்களை நினைத்துக் கொண்டனர். அவர்கள் மீதான எளிமையான அணுகுமுறைதான் வக்கீல்களை இப்படி நடக்கச் செய்து விட்டது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் மெத்தனமாக நடந்து கொண்டார். இது தான் கலவரத்துக்கு காரணமாகி விட்டது.
எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கோர்ட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் வக்கீல்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இதற்காக தனது அதிகபட்ச அரசியல் சாசன அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும்.
மேலும் தேவைப்பட்டால் வக்கீல்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதும் கூட வரவேற்கத்தகுந்ததே. இதன் மூலம் வக்கீல்களின் நடத்தை விதிமுறைகளை மாற்றியும், இறுக்கமாக்கியும், அதன் புனிதத்தை காக்க முடியும்.
காரணம், இதுபோன்ற சம்பவத்தால் வக்கீல்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களை நம்பி வருவோருக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. நீதித்துறைக்கும், சட்டத்திற்கும் கூட இதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டு விடுவதால் இதுபோன்ற நடவடிக்கைகள் தேவை.
இதுபோன்ற சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் வரை, வக்கீல்ளும், நீதிமன்றங்களும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை உச்சநீதிமன்றமே வகுக்க வேண்டும் என்று நீதிபதியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸார் மீதே அனைத்துத் தரப்பினரும் பொதுவான குற்றச்சாட்டுக்களை கூறி வரும் நிலையில் வக்கீல்கள்தான் பிரச்சினை பெரிதாக காரணம் என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications