அழகிரியின் மேற்பார்வையில் 10 தொகுதிகள்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் மு.க. அழகிரி போட்டியிடக் கோரி அவரை அவரது ஆதரவாளர்கள் நெருக்கி வருகின்றனர்.
அவர் போட்டியிடாவிட்டால் அவரது மனைவி காந்தியை நிறுத்த வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
மதுரையில் அழகிரி போட்டியிட வேண்டும் என்று கோரி அவரது பெயரில் திமுக வேட்பாளர்களுக்கான மனுக்களை வாங்கி பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.
அதே போல வேறு பல தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அழகிரிக்காக விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால், தேர்தலில் போட்டியிடும் திட்டம் அழகிரியிடம் இல்லை என்றே தெரிகிறது. தனக்கு கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் திமுகவையும் கூட்டணிக் கட்சியான காங்கிரசையும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெறச் செய்யும் முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
கட்சியி்ன் தென் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் இப்போதே ஆலோசனைகளை ஆரம்பித்துவிட்ட அழகிரி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
தென் தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் திமுகவும் காங்கிரசும் அழகிரியின் மேற்பார்வையில் தேர்தல் சந்திக்கவுள்ளன.
இந்த 10 தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை அழகிரி கேட்டு வாங்கியுள்ளார். மேலும் தொகுதிகளின் நிலவரம் குறித்து கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் அழகிரி ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.
இந்தத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை இறுதி செய்வதிலும் அழகிரியின் பங்கு அதிகமாகவே இருக்கும் என்பதால் சீட் கேட்டு அவரை நச்சரிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.
மதுரையில் 3 இடைத் தேர்தல்களிலும் திமுக கூட்டணியை அமோக வெற்றி பெற செய்த அழகிரி அதே வியூகத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலுலும் பயன்படு்த்தவுள்ளார் என்கிறார்கள்.
-
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
இட்லி, தோசை கடைகள் தமிழ்நாட்டில் திணறுதா? 28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? மக்கள் அவலம் -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.!












Click it and Unblock the Notifications