ஜெயலலிதா மீதான தேர்தல் வழக்கு - ஏப். 1க்கு தள்ளி வைப்பு
பரங்கிப்பேட்டை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான தேர்தல் வழக்கு ஏப்ரல் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2001-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, புவனகிரி உள்பட 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து தி.மு.க. எம்.பி. குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார்.
அதில், சட்ட விதிகளுக்கு புறம்பாக நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க அவர் கோரினார்.
அதையடுத்து ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி பரங்கிப்பேட்டை கோர்ட்டில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தேர்தல் கமிஷன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு நீதிபதி சரத்ராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ், ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கிற்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உள்ளதால் விசாரணையை ஏப்ரல் 1ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications