For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்குச் சந்தை - ஒரே வாரத்தில் ரூ. 55,000 கோடி நஷ்டம்

By Sridhar L
Google Oneindia Tamil News

மும்பை: பங்குச் சந்தை சரிவால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய முன்னணி நிறுவனங்கள் இழந்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா... ரூ.55 ஆயிரம் கோடி.

இதில் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே மூன்றில் ஒரு பங்கு நஷ்டத்தைச் சந்தித்துள்ளது ரிலையன்ஸ். முகேஷ் அம்பானி தலையிலான ரிலையன்ன்ஸ் நிறுவனம் மட்டும் ரூ.14,872 கோடியை இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக மும்பை பங்குச் சந்தையில் இதன் பங்குகள் பரிமாறப்பட்ட போது ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.1170 கோடி.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களிலிருந்த தங்கள் பெரும்பாலான பங்குகளை விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து கிடுகிடுவென பங்குச் சந்தையே சரிந்துவிட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் அளவு பலவீனமாகிவிட்ட சந்தையில், மீண்டும் காளையின் துள்ளலைப் பார்க்க 6 மாதங்களுக்கும் மேலாகலாம் என பங்கு வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ப்ளூ சிப் பங்குகள் எனப்படும் முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு இன்னும் கொஞ்ச நாளைக்கு எதிர்மறையான வர்த்தகம்தான் நிலவும் எனக் கூறி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X