For Quick Alerts
For Daily Alerts
Just In
பெங்களூர் விமான விபத்தில் பலியான விமானியின் உடல் சொந்த ஊர் வந்தது
ஓமலூர்: பெங்களூர் விமான விபத்தில் பலியான தமிழக விமானியின் உடல் நேற்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகை பெதாதி என்னும் இடத்தில் நேற்று முன்தினம் இந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்தின் சரஸ் பயிற்சி விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த விமானி இளையராஜா, பெங்களூரை சேர்ந்த பிரவீன், தீபேஸ் ஷா ஆகியோர் பலியானார்கள்.
இந்நிலையில் இளையராஜாவின் உடல் ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை விழுப்புரம் மாவட்டம் ஓமலூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு ஓமலூர் தாசில்தார் ராஜேஸ்வரி மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், இளையராஜாவின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
Comments
Story first published: Sunday, March 8, 2009, 12:33 [IST]