ஜப்பான் தூதரகத்தில் ராமதாஸ்-வைகோ மனு
சென்னை: இணைத் தலைமை நாடுகளில் ஒன்றான ஜப்பான், இனப்படுகொலையை நிகழ்த்தி வரும் இலங்கை அரசுக்கு எந்தவித நிதியுதவியும் செய்யக் கூடாது என்று கோரி சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தில் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் மனு அளித்தனர்.
இலங்கைக்கு நிதி உதவிஅளிக்கும் முக்கிய நாடுகளில் ஒன்று ஜப்பான். இந்த நிலையில், டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன், வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தூதுக்குழு இன்று காலை ஜப்பான் துணைத் தூதரகத்துக்கு சென்றது.
அவர்கள் துணைத்தூதர் காசாவோ மினாகாவே-வை சந்தித்து மனு அளித்தனர். இலங்கையில் ராணுவ தாக்குதலில் அப்பாவித்தமிழர்கள் உயிரிழந்து வருவதை சுட்டிக்காட்டி அந்நாட்டுக்கு அளித்து வரும் உதவியை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அப்படி உதவியை நிறுத்தாவிட்டால் உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழர்கள் ஜப்பான் நாட்டு பொருட்களை புறக்கணிக்க நேரிடும் என்றும் எடுத்துக்கூறினர்.












Click it and Unblock the Notifications