ஜெ. வீடு முன் தீக்குளிக்க முயன்ற தொண்டர்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டு முன் தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கர்ணன் (37) தீவிரமான அதிமுக தொண்டராவார். இவர் சென்னையில் ஜெயலலிதா நேற்று நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் இரவு 7.15 மணியளவில் பாட்டிலில் மண்ணெண்ணெயுடன் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுப் பகுதிக்கு வந்தார்.
அங்குள்ள ராகவேந்திரா அவென்யூவில் நின்றபடி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு ஜெயலலிதாவின் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார்.
அங்கு காவலுக்கு இருந்த போலீசார், அவரைப் பிடித்து தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, நான் அம்மா (ஜெயலிலதா) மீது மிகுந்த பற்று வைத்துள்ளேன். அவர் நலமுடன் இருப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். அதனால் தீக்குளித்து உயிரை விட தீர்மானித்தேன் என்றார்.
அவரது மனைவியும், குழந்தைகளும் சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கின்றனர். அவரை எச்சரித்த போலீசார் அவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.