Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவி மர்ம சாவு-பார்வையற்றோர் ஊர்வலம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததற்கு காரணமானவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என கோரி மதுரையில் பார்வையற்றோர் சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் புத்தூரில் உள்ள பார்வையற்றோர் பள்ளி விடுதியில் மலர் என்ற மாணவி 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, விடுதியில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இதையடுத்து அவரது மரணத்தில் பள்ளி நிர்வாகிகளுக்கு சம்பந்தம் இருப்பதாக கருதப்படுகிறது. மாணவி மலரின் மரணத்துக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆழ்வார்புரத்தில் இருந்து மதுரை ஆட்சியர் அலுவலம் வரை தாய் பார்வையற்றோர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு ஒன்றை அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தனர். இந்த ஊர்வலத்தில் தாய் சங்க அமைப்பாளர் சேதுராமன், சட்ட ஆலோசகர் ராமசாமி, செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+