48 மணிநேரத்துக்குள் தொகுதிப் பங்கீடு - காங்.குக்கு மம்தா கெடு

மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இடதுசாரி கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி, மம்தா பானரிஜியுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடத்த தொகுதி பங்கீட்டில் காங்கிரசுக்கு 14, திரிணமுல் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை காங்கிரஸ் தங்களது இறுதி முடிவை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் முடிவை அறிவிக்க கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. இந்நிலையில் மம்தா பானர்ஜி கூறுகையில்,
கேசவ்ராவ், என்னை தொடர்பு கொண்டு மேலும் கால அவகாசம் கேட்டார். இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே நாங்கள் காத்திருக்க முடியும். இடதுசாரிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணத்துடன் காங்கிரஸ் இருந்தால், இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது நிலையை தெளிவாக அறிவிக்க வேண்டும். இடதுசாரிகள் ஏற்கனவை தங்களது பிரச்சாரத்தை துவக்கிவிட்டன. இதில் நாங்கள் தற்போது பின்தங்கிவிட்டோம்.
பங்காரா தொகுதியை காங்கிரஸ் கேட்டது. அதை விட்டுகொடுத்தோம். தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. மாநிலத்தின் தெற்கு பகுதியில் 5 தொகுதிகளும், வடக்கு பகுதியில் 9 தொகுதிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் காங்கிரஸ் வலுவாக இருக்கும் இடங்களை நாங்கள் கேட்கவில்லை.
எனவே, 48 மணி நேரத்துக்குள் காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்காவிட்டால் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு சில இடதுசாரி நண்பர்கள் இருக்கின்றனர். மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் எளிதாக வெற்றி பெற இனியும் அனுமதிக்க மாட்டோம் என்றார் மம்தா பானர்ஜி.












Click it and Unblock the Notifications