48 மணிநேரத்துக்குள் தொகுதிப் பங்கீடு - காங்.குக்கு மம்தா கெடு

மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இடதுசாரி கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி, மம்தா பானரிஜியுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடத்த தொகுதி பங்கீட்டில் காங்கிரசுக்கு 14, திரிணமுல் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை காங்கிரஸ் தங்களது இறுதி முடிவை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் முடிவை அறிவிக்க கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. இந்நிலையில் மம்தா பானர்ஜி கூறுகையில்,
கேசவ்ராவ், என்னை தொடர்பு கொண்டு மேலும் கால அவகாசம் கேட்டார். இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே நாங்கள் காத்திருக்க முடியும். இடதுசாரிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணத்துடன் காங்கிரஸ் இருந்தால், இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது நிலையை தெளிவாக அறிவிக்க வேண்டும். இடதுசாரிகள் ஏற்கனவை தங்களது பிரச்சாரத்தை துவக்கிவிட்டன. இதில் நாங்கள் தற்போது பின்தங்கிவிட்டோம்.
பங்காரா தொகுதியை காங்கிரஸ் கேட்டது. அதை விட்டுகொடுத்தோம். தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. மாநிலத்தின் தெற்கு பகுதியில் 5 தொகுதிகளும், வடக்கு பகுதியில் 9 தொகுதிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் காங்கிரஸ் வலுவாக இருக்கும் இடங்களை நாங்கள் கேட்கவில்லை.
எனவே, 48 மணி நேரத்துக்குள் காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்காவிட்டால் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு சில இடதுசாரி நண்பர்கள் இருக்கின்றனர். மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் எளிதாக வெற்றி பெற இனியும் அனுமதிக்க மாட்டோம் என்றார் மம்தா பானர்ஜி.
-
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications