சிறார் சிறையிலிருந்து 11 பேர் ஓட்டம்- ஐவர் சிக்கினர்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 11 சிறார்கள் தப்பி ஓடினர். அவர்களில் ஐந்து பேரை போலீஸார் மீண்டும் பிடித்தனர்.
மதுரை சிறுவர் சீர்தீருத்தப் பள்ளியில் நேற்று இரவு 11 சிறார்கள் காவலாளியை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து காவலாளி, தெப்பக்குளம் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்த நிலையில் ரயில் நிலையத்தில் ஐந்து சிறார்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நிற்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
உடனடியாக அங்கு விரைந்த போலீஸார், தமிழரசன் உள்ளிட்ட ஐந்து பேரையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பியவர்கள் எனத் தெரிய வந்தது.
மற்றவர்களையும் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.












Click it and Unblock the Notifications