நீதிமன்ற மோதல்-சுந்தரத்தேவன் விசாரணை கமிஷன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதி்மன்றத்தில் வக்கீல்கள் மீதான தாக்குதலில் போலீஸாரின் செயல் குறித்து விசாரிக்க தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சுந்தரத்தேவன் இன்று நியமிக்கப்பட்டார்.
சுந்தரத்தேவன் தற்போது வருவாய்த் துறை ஆணையராக இருக்கிறார்.
உயர்நீதிமன்றத்தில் நடந்த மோதலின் போது போலீசார் நடந்து கொண்ட முறை என்ன? அதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து சுந்தரதேவன் விசாரணை நடத்துவார்.
விரைவில் இதற்கான அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதன்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தக் கமிஷனை தமிழக அரசு நியமித்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications