விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவு தலைவர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: புதுக்குடியிருப்புப் பகுதியில் இலங்கைப் படைகள் நடத்திய தாக்குதலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி விவகாரத்தைக் கவனித்து வந்த மூத்த தலைவரான சபாரத்தினம் செல்வதுரை என்கிற தமிழேந்தி கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழேந்தி பலியாகி விட்டதை இலங்கை ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த வாரம் நடந்த தாக்குதலின்போது, எந்த தினத்தில் தமிழேந்தி பலியானார் என்பதை ராணுவம் தெரிவிக்கவில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவின் பொறுப்பை தமிழேந்திதான் கவனித்து வந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வலது கை போல செயல்பட்டு வந்தவர் தமிழேந்தி.












Click it and Unblock the Notifications