40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெல்லும்-வைகோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக-மதிமுக கூட்டணியே 40 இடங்களிலும் வெல்லும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்கு நடப்பது வெளியில் தெரியாமல் இருக்க சர்வதேச செய்தியாளர்களை இலங்கை அரசு அனுமதிக்க மறுக்கிறது.
இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்யவில்லை என்று தங்கபாலு கூறுகிறார். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க ராணுவ உதவி செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி படுதோல்வி அடையும். அதிமுக-மதிமுக கூட்டணியே 40 இடங்களிலும் வெல்லும் என்றார்.












Click it and Unblock the Notifications