சென்னை வந்தால் நவீன் சாவ்லா - இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை: லோக்சபா தேரத்ல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
நேற்று இரவு ஏழரை மணிக்கு செனனைக்கு வந்த சாவ்லாவா தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வரவேற்றார்.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சாவ்லா பேசுகையில்,
நான் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்க இருக்கிறேன். காலையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்.
ஆந்திரா அரசின் செயல்பாட்டை பற்றி அங்குள்ள டி.ஜி.பி. பாராட்டி பேசியதாகவும், இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என்பதால் டி.ஜி.பி. மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எனக்கு கடிதம் எழுதப்பட்டதாக கேட்டு இருக்கிறீர்கள்.
ஆனால் அதுபற்றிய தகவல் எனக்கு வந்து சேரவில்லை. 13-ம் தேதி ஆந்திராவுக்கு சென்று அங்கு, தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வேன். அப்போது இதுபற்றி கேட்பேன். எனவே டி.ஜி.பி. விவகாரம் பற்றி இப்போது என்னால் கருத்து கூற இயலாது என்றார் சாவ்லா.
இன்று காலை 11 மணிக்கு கன்னிமாரா ஹோட்டலில் சாவ்லா தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நரேஷ் குப்தா தவிர காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications