மக்களவை தொகுதி அறிமுகம்-17: ஈரோடு
மாவட்டத்தின் தலைநகராக ஈரோடு விளங்கினாலும் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக என எக் கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் திருச்செங்கோடு தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிலை இது வரை இருந்து வந்தது.
தற்போது, திருச்செங்கோடு தொகுதி ஒழிக்கப்பட்டு அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும் புதிதாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
முன்பு இருந்த திருச்செங்கோடு, பழனி, பொள்ளாச்சி தொகுதிகளிலிருந்து சில தொகுதிகளை எடுத்து ஈரோடு என்ற பெயரில் புதிதாக உருவாகியுள்ள தொகுதி இது.
புதிய ஈரோடு லோக்சபா தொகுதியின் கீழ் வரும் சட்டசபை தொகுதிகள் - குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் , காங்கேயம்.
முன்பு திருச்செங்கோடு பாராளுமன்றத் தொகுதிகளில் குமாரபாளையம், ஈரோடு, மொடக்குறிச்சி, திருச்செங்கோடு, கபிலர்மலை, எடப்பாடி போன்ற தொகுதிகள் இருந்து வந்தது.
கடந்த திருச்செங்கோடு தொகுதியில் திமுக சார்பில் சுப்புலட்சுமியும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டனர்.
இதில் திமுகவைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற கையோடு மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.