யுஎஸ், ஜெர்மனி: துப்பாக்கி கலாச்சாரம்-26 பேர் பலி
பெர்லின்: ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் நடந்த இரு பயங்கர சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு மொத்தம் 26 பேர் பலியாயினர்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் துப்பாக்கிகள் மக்களிடையே சகஜமாகிவிட்ட நிலையில் அங்கு வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்து வருகிறது. முன்கோபிகள் சிறு தகராறுகளுக்கு கூட துப்பாக்கியை எடுப்பதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஜெர்மனியில் ஸ்டட்கார்ட் நகருக்கு அருகே உள்ள பள்ளியில் அந்த பள்ளியின் முன்னாள் மாணவன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் முகமுடி அணிந்து வந்து திடீர் தாக்குதல் நடத்தினான். இதனால் வகுப்பறைக்குள் இருந்த மாணவ, மாணவிகள் அலறியடித்து சிதறி ஓடினர்.
சிலர் உயிருக்கு பயந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து காயமடைந்தனர். இதை தொடர்ந்து அந்த மாணவன் வகுப்பில் இருந்தவர்களை நோக்கி வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் சம்பவ இடத்திலே 9 மாணவர்கள், 3 ஆசிர்யர்கள் உள்பட 12 பேர் பலியாயினர்.
பின்னர் பள்ளியில் இருந்து வெளியேறிய அவன் ரோட்டில் போய் கொண்டிருந்த மருந்ததுவமனை ஊழியரையும், மற்ற இருவரையும் சுட்டு கொன்றுள்ளான். பின்னர் ஒரு காரை கடத்தி தப்பிக்க முயற்சி செய்தான். அவனை விரட்டிபிடிக்க முடியாமல் போகவே போலீசாரை அவனை சுட்டுக்கொன்றனர்.
திட்டமிட்டு கொலை...
இதேபோல் அமெரிக்காவின் அலபாமா நகரில் 28 வயதான மைக்கேல் மெக்லெண்டன் என்பவர் 10 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் இக்கொலைகளை திட்டமிட்டு செய்துள்ளதாக தெரிகிறது. தனக்கு பிடிக்காத நபர்களை அல்லது தனக்கு பிடிக்காததை செய்தவர்களை பட்டியலிட்டு அவன் கொன்றுள்ளான்.
அவனால் முதலில் கொல்லப்பட்டவர் அவனது தாய் தான். பின்னர் தனது பாட்டி, மாமா, இரண்டு சகோதரர்கள் ஆகியோரை திட்டமிட்டு கொன்றுள்ளான். பின்னர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளான். இதில் அவனது மனைவி மற்றும் 18 மாத குழந்தை உட்பட 6 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து அவன் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications