லோக்சபா தேர்தல் - 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள்

மக்களவை தேர்தலுக்கு தேவையான அழியாத மை கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மைசூர் பெயின்ட் அண்ட் வார்னிஸ் என்ற அரசு நிறுவனம் மூலம் இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்ல கனடா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, கம்போடியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் மைகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
வழக்கமாக 5 மில்லி அளவு கொண்ட பாட்டில்களை தயாரித்து வந்த இந்நிறுவனம் இந்த முறை 7.5 செமீ., உயரம் கொண்ட 10 மில்லி பாட்டில்களை நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாரித்து வருகிறது. ஒவ்வொரு பாட்டில் மூலம் கிட்டத்தட்ட 700 வாக்காளர்களுக்கு மையிட முடியும்.
புள்ளிக்குப் பதில் கோடு!
இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் ஊதா மையால் கையில் சிறு புள்ளியிட்டு அடையாளம் வைப்பார்கள். ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையம் விரலின் மேல் பகுதியில் இருந்து நகத்தின் அடிபகுதி வரை நீண்ட கோடு இழுக்க உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவை இம்முறை சில மாநில தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டாலும், மக்களவை தேர்தலில் பயன்படுத்துவது இதுவே முதல்முறை இதனால் வழக்கத்தை விட கூடுதல் மை செலவாகும் என தெரிகிறது.
அதிகபட்சமாக உ.பிக்கு 2 லட்சத்து 86 ஆயிரம் பாட்டில்களும், குறைந்தபட்சமாக லட்சத்தீவுக்கு 120 பாட்டில்களும் தேவைப்படுகின்றன.
தமிழ்நாட்டுக்கு சுமார் 96 ஆயிரம் பாட்டில்கள் தேவைப்படும். மொத்தமாக நாடு முழுவதும் 20 லட்சம் பாட்டில்கள் தேவைப்படுகின்றன.
இதுவரை 7 லட்சம் பாட்டில் மை 16 மாநிலங்களுக்கு ஏற்கனவே சப்ளை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 லட்சம் பாட்டில்களையும் ஏப்ரலுக்குள் சப்ளை செய்யப்படும்.
இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுரேஷ் கூறுகையில், இந்த மை தயாரிர்க்க சாயங்கள், வாசனை பொருட்கள், சில்வர் நைட்ரேட், மை மற்றும் சிவ ரசாயனப் பொருட்களை பயன்படுத்துகிறோம். இந்த பாட்டீல்கள் அனைத்து பேக் செய்யப்பட்டு பத்திரமாக கொண்டு சேர்க்கப்படும். தொலை தூர நகரங்களுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications