For Daily Alerts
Just In
வன்னியில் நேற்றைய தாக்குதலில் 65 தமிழர்கள் படுகொலை
வன்னி: இலங்கைப் படைகள் நடத்திய தாக்குதலில் நேற்று 65 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மக்கள் பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீது நேற்று சிறிலங்காப் படையினர் ஆர்ட்டில்லரி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை நடத்தப்பட்ட தாக்குதலில் 13 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Comments
Story first published: Sunday, March 15, 2009, 12:49 [IST]