கடலோரப் பாதுகாப்புக்காக 40 புதிய சோதனைச் சாவடிகள்
தூத்துக்குடி: தமிழக கடலோரப் பகுதி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக 40 புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஐஜி ராஜேஷ்தாஸ் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார்.
தருவைகுளத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும பாதுகாப்பு நிலையத்திற்கு சென்ற அவர் அங்கு எஸ்பி தீபக் டமோர், கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி மணிரத்னம் ஆகியோருடன் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தருவைகுளத்தில் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கத்தை விடவும் அதிகமாக ரோந்து பணியும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடற்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் தான் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் தங்கள் பகுதிக்கு புதிதாக யாராவது அன்னியர் வந்தால் கூட அவர்களுக்கு தெரிந்துவிடும்.
கடலோர காவல் நிலையங்களுக்கு அதிநவீன தொலைதொடர்பு மற்றும் பாதுகாப்பு கருவிகளுடன் கூடிய பையுடன் கோல்டன் என்ற இரண்டு படகுகள் கொல்கத்தாவில் தயாராகி வருகின்றன. அங்கிருந்து இன்னும் சில மாதங்களுக்குள் வந்துவிடும்.
தமிழக கடற்கரையோர பகுதிகளில் தற்போது 60 செக் போஸ்ட்கள் இயங்கி வருகின்றன. மேலும் புதிதாக 40 இடங்களில் செக் போஸ்ட்கள் அமைக்கப்படும்.
கடல் வழியாக அன்னியர் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு ரோந்து பணி மற்றும் வனத்துறையினருடன் கூட்டு ரோந்து ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக கடற்படையில் பயன்படுத்தப்பட்டு வருவது போல 14 விசைப்படகுகள் ஓப்பந்தத்தின் அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் இந்த படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications