சங்க இலக்கியங்கள் மக்களை சென்றடைய வேண்டும்; துரைமுருகன்

சென்னையில் உள்ள மத்திய நிறுவனமான செம்மொழி தமிழாய்வு சார்பில் 10 நாட்கள் நடத்தப்படும் சங்க இலக்கிய பயிலரங்கில் தமிழக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
அப்போது துரைமுருகன் பேசுகையில்,
நமது முன்னோர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள், செய்த சீர்திருத்தங்கள் நாம் இன்று எழுதும் தமிழுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. உலகத்தில் வேறு எந்த மொழிகளோடும் இணையாத ஒரே மொழி தமிழ் மொழிதான்.
சங்க இலக்கியம், தமிழ் சமுதாயத்தின் கால கண்ணாடி. சங்க இலக்கியங்கள் வாயிலாக தான், நம்முடைய வரலாறு, நாம் யார், நமக்கு முன் இருந்த மன்னர்கள், நிலம், கடவுள், நாகரீகம், பழக்கவழக்கங்கள் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. அத்தகைய சங்க இலக்கியங்களை எளிமைப்படுத்தி, தமிழ் மொழி எல்லா மக்களையும் போய் சேரும் வகையில் செய்ய வேண்டும்.
நமது நாட்டின் கல்வி, சுகாதாரத்துக்கு கிறிஸ்தவ மதம் நிறைய தொண்டுகளை செய்திருக்கிறது. இதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். கிறிஸ்தவர்கள், தமிழ் மொழியை கற்று அதனை உணர்ந்திருந்ததால், தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தனர். உலகில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தாக்கு பிடித்து வருவது தமிழ் இலக்கியம் தான் என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications