ஏர்செல்: ரூ.25,000 கோடி புதிய முதலீடு!
பிரபல செல்போன் நிறுவனமான ஏர்செல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 25 ஆயிரம் கோடியை விரிவாக்கத் திட்டத்துக்காக முதலீடு செய்ய உள்ளது.
ஹைதராபாதில் ஏர்செல்லின் ஜிஎஸ்எம் மொபைல் சேவையைத் தொடங்கிவைத்த அதன் தலைவர் குல்தீப் சிங் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஏர்செல் நிறுவனம் நடப்பு ஆண்டில் ரூ. 5,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் எண்ணிக்கையை 1.7 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
டெல்லி, உத்தரப் பிரதேசம், மும்பை ஆகிய பகுதிகளுக்கும் விரைவில் ஏர்செல் ஜிஎஸ்எம் சேவை விரிவுபடுத்தப்படும். இம்மாத இறுதிக்குள் அந்தப் பணிகள் முடிந்துவிடும்.
வரும் ஏப்ரல் மாதத்துக்குள் ஏர்செல் செயல்பாடு வட்டாரங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்த்தப்படும். 13-வது நகரமாக ஹைதராபாதில் தற்போது ஜிஎஸ்எம் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் மட்டும் ஏர்செல் நிறுவனம் ரூ. 1,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் ரூ. 500 கோடியும், அடுத்து டிசம்பருக்குள் ரூ. 500 கோடியும் முதலீடு செய்யப்படும் என்றார் குல்தீப் சிங்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications