திமுக பெண் எம்எல்ஏ மீது மாமியார் கொலை மிரட்டல் புகார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: உப்பிலியபுரம் திமுக எம்எல்ஏ ராணி தனது மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

உப்பிலியபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ ராணி. இவரது கணவர் ராமச்சந்திரன். ராமச்சந்திரனின் தந்தை வெள்ளியின் இரண்டாவது மனைவி நாகம்மா. நாகம்மாளுக்கு அன்னபூரணி என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் நாகம்மா, ராணியும், ராமச்சந்திரன் மற்றும் உறவினர்கள் சிலர் சேர்ந்து தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக போலீஸ் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில்,

எனது கணவரின் பெயர் வெள்ளி. அவருக்கு நான் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டேன். எனது கணவர் ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணத்தில் 4 குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்தேன். ரூ 3 லட்சத்தை எனது மருமகள் ராணி முதல்முறை தேர்தலில் போட்டியிட வேண்டுமென வாங்கி கொண்டார்.

இவை போக எனக்கும் ரூ.95 ஆயிரம் போட்டு வைத்துள்ளேன். தற்போது எனது பெயரில் உள்ள பணம் மற்றும் நான் வசிக்கும் வீடு மற்றும் நிலத்தை என்னை மிரட்டி எழுதி வாங்கி கொண்டனர். அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தலைமறைவாக வாழ்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+