இலங்கை-பாமக-வி.சி. தொண்டர்கள் தீக்குளிப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்& அரியலூ: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரும் பாமக தொண்டர் ஒருவரும் இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி தீக்குளித்துள்ளனர். இருவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.

கடலூர் முதுநகர் அருகே உள்ள அன்னவல்லி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகன் ஆனந்த்(23). விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான இவர் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார்.

காலையில் ஆனந்த் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் மாலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு 95 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி தீக்குளித்து விட்டதாக ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாமக தொண்டரும் தீக்குளிப்பு:

அதே போல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த காட்டுநாகலேரியை சேர்ந்த ராஜசேகர் (24) பாட்டாளி மக்கள் கட்சி தொண்டராவ்ர்.

இவர் நேற்று மாலை மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு ராஜசேகர் தீக்குளித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் ஓடி வந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ராஜசேகருக்கு செல்வி என்ற மனைவியும் 10 வயதில் அஜித் என்ற மகனும் உள்ளனர். ராஜசேகர் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி மிகவும் வேதனையுடன் பேசி வந்துள்ளார். இந் நிலையில்தான் தீக்குளித்துள்ளார்.

தஞ்சை மருத்துவமனையில் அவர் அளித்த வாக்குமூலத்திலும் இலங்கைத் தமிழர் படும் துயரத்தை தாங்க முடியாமல் தீக்குளித்ததாகக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+