ராஜ்நாத் Vs ஜேட்லி: ஆர்எஸ்எஸ்- அத்வானி சமரச முயற்சி
டெல்லி: நாடாளுமன்றld தேர்தல் நேரத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கும், பொதுச் செயலர் அருண் ஜேட்லிக்கும் இடையே எழுந்துள்ள மோதல் கட்சியின் தேர்தல் பணிகளை கடுமையாக பாதித்து வருகிறுத. இதையடுத்து இவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் மூத்த தலைவர் அத்வானியும் ஆர்எஸ்எஸ்சும் ஈடுபட்டுள்ளனர்.
வட கிழக்கு மாநில தேர்தல் இணை ஒருங்கிணைப்பாளராக சுதன்சூ மிட்டல் என்ற தொழிலதிபர் நியமிக்கப்பட்டது தான் இந்த பிரச்சினைக்கு மூல காரணம் எனத் தெரிகிறது. தன்னை கேட்காமல் நியமிக்கப்பட்ட மிட்டல் நீக்கப்பட வேண்டும் என்பதில் ஜேட்லி பிடிவாதமாக இருக்கிறார். அதே சமயத்தில் தன்னால் நியமிக்கப்பட்டவரை வெளியேற்ற முடியாது என ராஜ்நாத்தும் உறுதியாக இருக்கிறார். இதை இவர்கள் ஒரு கெளரவ பிரச்சினையாக கருதி வருகின்றனர்.
இதனால் தேர்தல் பணிகளை கவனிப்பதை விட இந்த மோதலை எப்படி தீர்ப்பது என்பதில் தான் தற்போது பாஜக தலைமை அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றது.
இந்த மோதல் காரணமாக அருண் ஜேட்லி, கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். மிட்டலை நீக்காவிட்டால் இன்று தேதி மபி, கர்நாடகா, டெல்லி மற்றும் பீகார் மாநில நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் தேர்வுக்கான கூட்டத்திலும் தான் பங்கேற்கப் போவதில்லை என ஜேட்லி உறுதியாக கூறிவிட்டார்.
அவருடன் சேர்ந்து கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் இந்தக் கூட்டத்தை புறக்கணி்த்துவிட்டார். அவருக்கும் கர்நாடக பாஜக மூத்த தலைவரான அனந்த்குமாருக்கும் இடையே யாருக்கு சீட் கொடுப்பது என்பதில் மோதல் நடந்து வருகிறது. அனந்த்குமாரை அத்வானி, ஆர்எஸ்எஸ் ஆதரிப்பதால் கோபத்தில் இக் கூட்டத்தை எதியூரப்பா புறக்கணித்துவிட்டார்.
இந்நிலையில் ஜேட்லி-ராஜ்நாத் சிங் இடையே சமாதானம் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் பொது செயலாளர் சுரேஷ் சோனி முயற்சித்து வருகிறார். சுரேஷ் சோனி ஜேட்லியை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார். இப்பிரச்சினை கட்சியின் தேர்தல் பணிகளை பாதிக்கும் என கூறியுள்ளார்.
இவரை தவிர்த்து பாஜக முக்கிய தலைவரான அத்வானி, பிற தலைவர்களான ராம் லால், முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு, கட்சியின் பொருளாளர் ராம்தாஸ் அகர்வால் ஆகியோரும் ஜேட்லியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இது குறித்து வெங்கையா நாயுடு கூறுகையில், ஜேட்லி கட்சி பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். அவரது பொறுப்புகள் நன்றாக கவனித்து வருகிறார். கட்சியின் உள் விவகாரங்களை பற்றி பொது இடங்களில் பேச முடியாது என்றார்.
-
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications