கர்நாடகத்திலிருந்து பிரச்சாரம் துவக்கும் சோனியா
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தொடங்குகிறார்.
தாவணகெரேயில் 23ம் தேதி அவரது முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கட்சியின் தேர்தல் தேர்தல் அறிக்கை 26ம் தேதி வெளியிடப்படுகிறது.
இதற்கிடையே பெங்களூர் மத்திய தொகுதி அல்லது தெற்குத் தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா போட்டியிடலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள அவர் தான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிவி்ட்டார்.
இதனால் இதில் ஏதாவது ஒரு தொகுதியில் கர்நாடக மூத்த காங்கிரஸ் தலைவரான ஜாபர் ஷெரீப் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.
இந் நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்பியான அம்பரீஷை இழுக்க பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.
சுக்லா-ஜோகிக்கு காங். சீட் மறுப்பு:
இதற்கிடையே சட்டீஸ்கர் மாநிலத்தில் போட்டியிட அம் மாநில முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகிக்கும், மூத்த தலைவர் வி.சி. சுத்லாவுக்கும் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு தர மறுத்துவிட்டது.
11 தொகுதிகள் கொண்ட இம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் அஜித் ஜோகி, வி.சி.சுக்லா ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை.
தனது மகன் அமித் ஜோகிக்கு சீட் பெற அஜித் ஜோகி தீவிர முயற்சி செய்தார். ஆனால்ஸ அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இத்தனைக்கும் வி.சி.சுக்லா மஹாசமுத் தொகுதியில் 9 தடவை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 10வது முறையாக போட்டியிட அவர் திட்டமிட்டிருந்த நிலையில் கட்சி அவருக்கு சீட் தரவில்லை.












Click it and Unblock the Notifications