பாகிஸ்தானில் அமைதி-இந்தியா நிம்மதி பெருமூச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தானில் பிரச்சினைகள் தீர்ந்து அமைதி திரும்பியிருப்பது நிம்மதியைத் தருகிறது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், பாகிஸ்தானில் எது நடந்தாலும் அது அந்த நாட்டின் உள் விவகாரம் ஆகும். வழக்கமாக, எந்தவொரு நாட்டின் உள் விவகாரம் குறித்தும் நாம் (இந்தியா) கருத்து கூறுவது கிடையாது.
அதே நேரத்தில், பாகிஸ்தானில் ஒரு ஜனநாயக அரசு இருப்பதே இந்தியாவின் நலனுக்கு உகந்தது. பாகிஸ்தான் பலமாக இருப்பது இந்த பிராந்தியத்திற்கு முக்கியமானு.
அப்போதுதான் தீவிரவாதத்துக்கு எதிராக முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க முடியும்.
அந்த அடிப்படையில், அங்கு அமைதி திரும்பியிருப்பது நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications