கோவை நீதிமன்றத்தில் வக்கீல்கள் கைகலப்பு
கோவை: கோவை நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு இடைய நடந்த வாய்த்தகராறு முற்றியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மூத்த வக்கில்கள் சிலர் தலையிட்டு பிரச்சினை தீர்த்து வைத்தனர்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுவையில் வக்கீல்கள் தொடர்ந்து நீதிமன்ற செல்வதை புறக்கணித்து வருகின்றனர்.
இதனால் ஜாமினில் வெளியே வர முடியாமல் ஏராளமான கைதிகள் வாடி வருகின்றனர். இந்நிலையில் சில ஏழை வக்கீல்களும் கஷ்டப்படுவதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் வக்கீல்கள் சங்கம் அருகில் சில வக்கீல்கள் காரசாரமாக பேசி கொணடிருந்தனர்.
அதில் ஒரு வக்கீல் மற்றொருவரை பார்த்து உன்னால் தான் எல்லாம் கெட்டுவிட்டது என கூறியுள்ளார். இதையடு்த்து வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இந்த சம்பவத்தை அறிந்த சில மூத்த வக்கீல்கள் தலையிட்டு வக்கீல்களை அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications