தமிழகத்தில் லாலு கட்சி 16 தொகுதிகளில் போட்டி
சென்னை: லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் தமிழகத்தில் 15 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடவுள்ளது.
அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தேர்தலில் பங்கு கொள்ள வாய்ப்பு கேட்பது.
- ஒரு வேளை வாய்ப்பு தராவிட்டால், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், வேலூர், கள்ளக்குறிச்சி(தனி), மதுரை, ராமநாதபுரம், கோவை, திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை, திருநெல்வேலி, சிதம்பரம்(தனி), ஆரணி, கிருஷ்ணகிரி ஆகிய 15 தொகுதிகளில் தனித்தோ அல்லது ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ போட்டிடுவது என செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதை லாலு பிரசாத் யாதவிடம் விளக்கிக் கூறியுள்ளனர் தமிழக தலைவர்கள். அதைக் கேட்ட லாலு, மாநில கமிட்டியின் முடிவுப்படி தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார் என்று மாநில தலைவர் கேசவன் தெரிவித்துள்ளார்.