வருண் பேசியதில் என்ன தவறு?- பால் தாக்கரே
Subscribe to Oneindia Tamil
மும்பை: வருண் காந்தி பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்று சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா இதழில் பால் தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில், வருண் காந்தி பேசியதில் தவறு இல்லை. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க தேவை இல்லை.
வருண் காந்தி உண்மையைத்தான் பேசியுள்ளார். இதற்காக எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
தனது தந்தை சஞ்சய் காந்தியைப் போலவே வேகமாக இருக்கிறார் வருண் காந்தியை. இதைத்தான் சிவசேனா விரும்புகிறது.
எனவே வருண் காந்தியை பாஜக தலைமை வற்புறுத்தி மன்னிப்பு கேட்க வைக்கக் கூடாது. அவரை ஒதுக்கி விட முயற்சிக்கக் கூடாது என்று அந்த தலையங்கம் கூறுகிறது.












Click it and Unblock the Notifications