இந்தியாவின் உதவியால்தான் வென்றோம்-இலங்கை

இலங்கைக்கு வந்துள்ள இந்திய ராணுவ மருத்துவக் குழுவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கை மருத்துவக் கவுன்சில் இது குறித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. லொகு பண்டாரா இதுகுறித்து அதிருப்தி தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய, அமைச்சர் நிமல் சிரிபாலா டிசில்வா கூறுகையில், புல்மொட்டையில் இந்திய மருத்துவகுழுவின் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய ராணுவ மருத்துவ குழு அல்ல. இந்திய ராணுவத்துக்கு மருத்துவம் செய்த ராணுவத்தினர் அல்லாத மருத்துவ குழு தான் இது.
இலங்கை அரசின் சட்ட திட்டத்துக்கு உட்பட்டே இந்திய மருத்துவ குழு இங்கு சேவை செய்யும். இந்தியா வழங்கிய நிவாரண பொருட்கள் கூட இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய உதவி..
விடுதலைப்புலிகளுடனான போரில் ராணுவம் வெற்றி பெற்றதற்கு இந்திய அரசின் மிகப்பெரிய உதவியே காரணம். இந்திய அரசின் உதவி மட்டும் இல்லை என்றால் இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது.
எனவே இலங்கை மக்கள் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர். நாம் அனைவரும் கட்சி வேறுபாடு இல்லாமல் இந்தியாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications