பாளை காவல் நிலையத்தில் திடீர் தீ
நெல்லை: பாளை காவல் நிலையம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களில் திடீரென தீ பற்றி கொண்டது. தீயணைப்பு படையினரின் கடும் முயற்சியில் தீ அணைக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளை காவல் நிலையம் முன்பாக தலைமை போஸ்ட் ஆபிஸ் சுவரை ஓட்டியுள்ள பகுதியில் வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட சில வாகனங்களை போலீசார் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அந்த வாகனங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்ட தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியன், பாளை நிலைய அலுவலர் அகமது அலி, தலைமையில் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைவில் வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு கார்கள், மற்றும் ஒரு லாரியி்ன் டயர் தீப்பிடித்து சேதமடைந்ததாக தீயணைப்பு துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாராவது வேண்டுமென்றே வாகனங்களுக்கு தீ வைத்தார்களா, அப்பகுதியில் புதரி்ல் அணைக்காமல் போட்ட பீடித்துண்டால் தீ பரவி வாகனங்கள் எரிந்ததா என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications