திமுகவிடம் சீட் கேட்போம்- நாடார் பேரவை
மதுரை: தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவிடம் சீட் கேட்போம் என்று அதன் தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டில் பனை, தென்னை மர தொழிலை நம்பி 10 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்திற்கு கள் இறக்கி விற்க தமிழக அரசிடம் அனுமதி கோரி வருகிறோம்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி டில்லியில் வரும் மார்ச் 20ம் தேதி கவனஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெறும். இதில் தமிழ்நாடு நாடார் பேரவையைச் சேர்ந்த 500 பேர் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.
நாடார் பேரவை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து திமுகவை ஆதரித்து வருகிறது. எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடார் பேரவை சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கேட்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications