பணவீக்கம் குறைந்தது-வர்த்தகமும் மந்தம்!
மும்பை: பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்ததால் இன்று சந்தையில் பங்கு விற்பனை மந்தமாகவே காணப்பட்டது.
முதலீட்டுப் பொருட்கள், உலோகத் துறைப் பங்குகள் மற்றும் நுகர்வோர் பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் அனைத்துமே இன்று வீழ்ச்சி கண்டன.
தொழில் நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைப் பங்குகள் ஓரளவு லாபம் கண்டாலும், எப்போது வீழ்ச்சியடையுமோ எனற ஆபத்துடன்தான் அவற்றை கைமாற்றி விட்டனர் முதலீட்டாளர்கள்.
முன்னதாக காலையில் ஓரளவு திருப்திகரமாகவே துவங்கியது பங்கு வர்த்தகம். ஆனால் பணவீக்க விகிதம் குறித்த புள்ளிவிவரம் வெளியானதும், வர்த்தகத்தின் வேகமும் குறைந்தது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 25 புள்ளிகள் உயர்ந்து 9001 புள்ளிகளில் நிலை பெற்றது. நிப்டியிலும் மந்தமான நிலைதான். 12.45 புள்ளிகள் உயர்ந்து 2807 புள்ளிகளில் நிலைபெற்றது.
சன் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்ஸி பங்குகள் லாபத்தில் கைமாறின. இன்போஸிஸ், மாருதி சுசுகி மற்றும் எச்டிஎப்சி பங்குகள் சுமாரான லாபத்தில் கைமாறின.
டாடா ஸ்டீல், பிஎச்இஎல், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் ஹிண்டால்கோ பங்குகள் நஷ்டத்தில் விற்பனையாகின.












Click it and Unblock the Notifications