திமுகவிடம் 15 தொகுதிகள் கேட்டுள்ளோம்-காங். எம்பி
திண்டுக்கல்: திமுகவிடம் காங்கிரசுக்கு 15 தொகுதிகள் கேட்டுள்ளோம் என்று திண்டுக்கல் தொகுதி எம்பியான சித்தன் கூறியுள்ளார்.
திண்டுகëகல் மாவட்டம் ஆத்தூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் செம்பட்டியில் நடைபெற்றது. இதில் பேசிய சித்தன்,
கடந்த நாடாராளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்து 5 ஆண்டுகாலம் எம்.பியாக பணியாற்ற வாய்ப்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி. கடந்த 5 ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு தலா ரூ.2 கோடி வீதம் எம்பி நிதியில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் 220 திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.
திண்டுக்கல்-மதுரை இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதை எனது முயற்சியால் தான் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்தப் பாதையில் போக்குவரத்து தொடங்கியவுடன் மதுரை-திண்டுக்கல் இடையே 10 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டுக்கல் தொகுதியில் 1971, 1994, 1998, 1999 மற்றும் 2004ம் ஆண்டுகளில் காங்கிரஸ் போட்டியிட்டதால் இம்முறையும் இத்தொகுதியை காங்கிரசுக்கே ஒதுக்க வேண்டுமென்று ஜி.கே வாசன் முயற்சி செய்து வருகிறார். எனவே இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இம்முறை 15 இடங்களில் போட்டியிட திமுகவிடம் பேசி வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications