40 தொகுதிகளையும் கைப்பற்ற உழைப்போம்: சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்
நெல்லை: 40 லோக்சபா தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் உழைப்போம் என்று மதிமுக எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத்தை விடுதலை செய்ய கோரி நெல்லை மாநகராட்சி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து பேசினார் ரவிச்சந்திரன்.
அப்போது அவர் கூறுகையில்,
இலங்கையில் நடந்து வரும் தமிழர்கள் படுகொலையை கண்டித்து மதிமுக சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இது அரசியல் பலி வாங்கும் நடவடிக்கையாகும்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த நாஞ்சில் சம்பத் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
மதி்முக தற்போது முக்கிய கால கட்டத்தில் உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வெற்றிக்காக பாடுபட வேண்டும். இலங்கை அரசுக்கு ஆயுத தளவாடங்களை வழங்கி வரும் காங்கிரசுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
பணம், அதிகாரம் மூலம் மதி்முக தொண்டர்களை விலை பேச முடியாது. தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இப்போதே கடுமையாக உழைக்க வேணடும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications