முன்னாள் அதிமுக அமைச்சர் நடேசன் பால்ராஜ் மரணம்
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் நடேசன் பால்ராஜ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
1991ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடேசன் பால்ராஜ். பின்னர் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றார். இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
காலப் போக்கில் தீவிர அரசியலில் இடம் பெறாமல் இருந்து வந்தார் நடேசன் பால்ராஜ். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து 2 மாதங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார்.
நடேசன் பால்ராஜ் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தைச் சேர்ந்தவர்.
சென்னை மடிப்பாக்கத்தில் இன்று மாலை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications