நெல்லை மாவட்டத்தில் 27, 28 தேதிகளில் விஜயகாந்த் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெல்லை மாவட்டத்தில் வரும் 27, 28ம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தென்காசி லோக்சபா தொகுதிக்குட்பட்ட நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வரும் 28ம் தேதி தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
தென்காசியில் 28ம் தேதி மாலை 5 மணிக்கு பிரசாரத்தை துவங்கும் விஜயகாந்த், தொடர்ந்து செங்கோட்டை, வடகரை, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் மாவட்ட, ஓன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications