அமெரிக்க எம்பிஏவுக்கு இந்தியர்கள் மத்தியில் மவுசு சரிவு

கடந்த ஆண்டு வரை அமெரிக்கா சென்று எம்பிஏ படித்து, அங்கே நல்ல நிறுவனத்தில் வேலையில் சேர வேண்டும் என்பது தான் இந்திய மற்றும் உலக இளைஞர்களி்ன் கனவாக இருந்தது.
ஆனால், உலக பொருளாதார பிரச்சினை மற்றும் ஒபாமா அரசு விசா வழங்குவதில் புகுத்தியுள்ள புதிய சிக்கலான நடைமுறைகள் ஆகியவற்றால் தற்போது இந்திய இளைஞர்களின் கனவுகளில் அமெரிக்கா வருவதில்லை.
அதேபோல் கடந்த காலங்களில் அமெரிக்காவில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு ரூ. 75 லட்சம் வரை கல்வி கடன்கள் கிடைத்தன. ஆனால், சமீபகாலமாக இது நிறுத்தப்பட்டு விட்டது. வங்கிகள் இது நாள் வரை இதற்கான மாற்று திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
இதையடுத்து இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் சொந்த நாட்டில் உள்ள கல்லூரிகளில் படிக்கவே அதிகம் விரும்புகிறார்கள்.
இது குறித்து மும்பையை சேர்ந்த நிஷாந்த் பனோர் என்ற மாணவர் கூறுகையில், எனக்கு அமெரிக்காவின் ஆண்டர்சன் ஸ்கூல் ஆப் மானேஜ்மன்டில் எம்பிஏ வாய்ப்பு கிடைத்தது. ரூ. 15 லட்சம் ஸ்காலர்ஷிப் தருவதாக சொன்னார்கள். ஆனால், படிப்பு முடித்தபின் அமெரிக்காவில் வேலை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
எச்-1பி விசாவில் உள்ள சிக்கல்கள், அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை இல்லை போன்ற அசாதாரண சூழ்நிலைகள் நிலவுவதால் இந்த வாய்ப்பை புறக்கணித்து விட்டேன்.
அமெரிக்காவில் மீண்டும் நல்ல சூழல் நிலவும் என்ற நம்பிக்கையில் அங்கு செல்ல நான் விரும்பவில்லை. இந்தியாவில் இருக்கும் ஐஐஎம்களில் ஒன்றில் சேர்ந்து படிக்கவிருக்கிறேன் என்றார்.
இந்தியா திரும்புகிறார்கள்...
அதே சமயத்தில் தற்போது அமெரிக்காவில் படித்து வரும் இந்தியர் மற்றும் சீனர்களில் 85 சதவீதம் பேர் தங்களுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. படிப்பு முடித்தவுடன் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளனர். ஐரோப்பியர்கள் மத்தியில் இந்த எண்ணம் 72 சதவீதம் உள்ளது.
சீனர்களில் 52 சதவீதம் பேர் தங்களுக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்ற நாடாக சீனாவையே கருதுகிறார்கள். அமெரிக்காவில் படிக்கும் 32 சதவீதம் இந்தியர்கள் மற்றும் 26 சதவீதம் ஐரோப்பியர்கள் தற்போதைய சூழ்நிலையில் வேலை பார்க்க சிறந்த இடமாக தங்களது தாய்நாட்டையே கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் அமெரிக்க படிப்புக்கு மவுசு குறைந்துள்ளதை சிகாகோ பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகி ரோஸ்மோரி மார்டினலி உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றார்.
-
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்.. 2 சொந்த போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா.. என்ன நடந்தது? -
அமெரிக்க கடற்படையின் ‘புதிய வேட்டைக்காரன்’.. அணு ஆயுதத்தோடு களமிறங்கும் USS நியூ ஜெர்சி.. ஏன்? -
ஈரான் கண்ணில் மண்ணை தூவிய அமெரிக்கா.. டீப் பகுதிக்குள் சென்று வீரரை மீட்டது எப்படி? ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம் -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
"48 மணி நேரம் டைம்.. ஈரான் மீது நரகமே இறங்க போகுது.." அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த 'குட் ப்ரைடே' ஷாக்: மஜீத் டெக்னாலஜியால், வானில் சுருண்ட வார்ஹாக் -
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்?











Click it and Unblock the Notifications