மனைவி கொலை- கணவன் நாடகம் அம்பலம்
ஈரோடு: நீண்டநாட்களாக திட்டமிட்டு மனைவிக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்துவிட்டு மனைவி உடல்நலம் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக நாடகமாடிய கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் உள்ள புதூரைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (59). ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவருடைய வளர்ப்பு மகள் காயத்திரிக்கும் (23), கவுந்தப்பாடியில் கம்ப்யூட்டர் நிறுவனம் வைத்திருந்த கவுதமன் என்பவருக்கும் கடந்த 2005ல் திருமணம் நடந்தது.
சமீபகாலமாக இவரது தொழில் முடங்கி, கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைக்க சிவலிங்கம் அடிக்கடி பணம் கொடுத்து உதவியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தன் மனைவி காயத்திரிக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தார். அதற்கும் பணம் வேண்டுமென்று சிவலிங்கத்திடம் பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் காயத்திர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் சிவலிங்கத்துக்கு தனது வளர்ப்பு மகள் சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர் போலீசிலி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பிணத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்தனர். அதில் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
பிரேத பரிசோதனை நடக்கவிருப்பதை அறிந்த கவுதமன் தலைமறைவானார். போலீசார் அவரை தேடியநிலையில் நேற்று அவர் சலங்கபாளையம் கிராம நிர்வாக அதிகாரி முன்பு சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், காயத்திரிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறினால் சிவலிங்கம் உடனடியாக பணம் கொடுப்பார் என கருதி கவுதமன் காயத்திரிக்கு இன்சுலின் மருந்தை அதிக அளவில் செலுத்தி மயக்க நிலையிலேயே வைத்து இருந்திருக்கிறார். ஒரு சமயத்தில் தன்னுடைய நாடகத்தை காயத்திரி, மாமனார் சிவலிங்கத்திடம் கூறி விடலாம் என பயந்து போன கவுதமன், அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications