பாஜக மதவாத கட்சி அல்ல-சரத்குமார் சர்டிபிகேட்
மதுரை: பாஜகவை மதவாத கட்சி என்று மற்ற கட்சிகள் கூறுவது அவர்களின் சுயநலத்திற்காகத்தான் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில்,
பாஜகவுடன் தேர்தல் உடன்பாடு குறித்து 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இறுதிகட்ட பேச்சுவார்த்தை இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறும்.
இறுதிகட்ட பேச்சுவார்த்தைக்குப்பின், எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரியவரும். பாஜகவை மதவாத கட்சி என்று மற்ற கட்சிகள் கூறுவது அவர்களின் சுயநலத்திற்காகத்தான்.
காரணம் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கடந்த காலத்தில் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்திருந்ததை மறுக்கமுடியாது.
கோயிலுக்கு செல்வதை கண்டித்து வளர்ச்சி பெற்ற திமுகவில் இன்று ஏராளமானோர் கோயிலுக்கு செல்கின்றனர். மக்களின் தேவைகளுக்கேற்ப கட்சிகள் மாறிவருகின்றன. எனவே மதவாதம் என்ற பேச்சு தேர்தலில் எடுபடாது. பாஜகவுடன் கலந்து ஆலோசித்து தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications